Wednesday, 14 September 2016

என் காதல்

கனவுகளாய் என் இரவில் 
கவிதைகளாய் என் சொல்லில் 
காகிதமாய் என் அறையில் - காதல் 
கடல்நீராய் என் புவியில்!!! 

மருத்துப்போகுமோ என்னிதயம் காத்திருந்து, 
மதியே! அவளின் மௌனத்தினால்!! 
மரியாதை தந்தாள் என்னன்பிற்கு 
மனதிற்கு மட்டும் வந்துசென்றாள் கனவாக!!! 

ஊர் அறிய வேண்டும் - என் 
உண்மை காதல் என்பது, 
ஊமையானேன் அவளின் சம்மதத்திற்கு, 
உண்மையானேன் என் கனவுகாதலுக்கு...!!! 

1 comment: