Saturday, 10 September 2016

தாயின் அன்பு முத்தம்

கலப்படமில்லா காதல் முத்தம் 
____இலக்கணமில்லா மொழியின் முத்தம் 
கண்ணயரா விழிகள் நித்தம் 
____என்னுயிர்த்தாயின் பார்வை முத்தம்! 

என்னுயிர் உன்னுயிரைக் கொண்டு 
____உன்னுடலில் என்னைக் கொண்டு 
எண்ணங்களில் என்னுருவம் கண்ட 
____மண்ணுலகத் தெய்வத்தின் கனவுமுத்தம்! - அனைவருக்கும் 

விடுமுறை என்பது உண்டு 
____விலகுவதற்கு வாய்ப்பும் உண்டு 
விட்டுக்கொடுக்காமல் உழைப்பாயே எனக்காக - உன் 
____வியர்வையால் குருதி முத்தம்! 

ஊர் வெறுக்கும் தொல்லையானாலும் 
____பேர் கெடுக்கும் பிள்ளையானுலும் 
உணவு சாப்பிட்டாயா? எனக்கேட்க்கும் 
____உன் உச்சப்பாசத்தின் முத்தம்! 

உன்குருதியை உணவாய் தருவாய் 
____உன்னழகில் என்னுடல் தருவாய் 
என் வாழ்க்கை தொடக்கம் தருவாய் - தாயே! 
____உன் அன்பு முத்தத்தில்!!! 

No comments:

Post a Comment