Tuesday, 15 November 2016

காதல் தோல்வி இல்லையடி

நீ என்னை பிரியும் நேரம்
என் கண்ணில் ஏதோ ஈரம்
என் இதயம் வழித்திடுமோ! ஏனோ
என் இளமை முடிந்திடுமோ?
கவிதை நீயென கண்ணில் கண்டேன்
கண்ணில் கண்டத்தை வார்த்தையில் தொடுத்தேன்
கவிதையே நீ கனவா ? என்
கவிதை உனக்கு கறையா?
என் இதயமோரம் நீ ரோஜாச்செடி
முள்ளைக் கொண்டு எனை கிராதடி
இங்கு இதயம் சிதறுதடி
இரத்தம் மொத்தம் வலியுதடி
இது காதல் தோல்வி இல்லையடி
உனக்கு காதல் ஏனோ தோன்றவில்லையடி
என் காதல் கனவு - இங்கு
வெறும் கானல் நீராய் மாறுதோடி?
விருப்பம் என்பது இயற்கையடி
விருப்பத்தை மறைப்பது தவறுதானடி
விருப்பத்தை விருப்பமாய் சொன்னேன் – நீ
வெறுப்பது நியாயமா ஏனடி?

No comments:

Post a Comment