Thursday, 17 November 2016

தாய் தந்தை அன்பு

பெற்றவருக்கு பிள்ளையுமானென்! 
____பெரும் தொல்லையுமானேன்!! 

இல்லை என்றுசொன்னால் 
____இடியென பிடிவாதமானேன்!! 

பள்ளிக்கு செல்லாமல் 
____பாவம் அரிவிலியானென்!! 

எல்லாமறிந்தும் தட்டிக்கொடுத்தீர் 
____எண்ணங்களில் நேர்மையானேன்!! 

கோவிலேனும் குருகுலத்தில் 
____முதல் மாணவனானேன்!! 

கல்லூரியெனும் காதலில் 
____கால் பதித்தேன்!! 

காதல்தோல்வியெனும் கடலில் 
____தன்னிலை மறந்தேன்!! 

கட்டிப்பிடித்து கரையேற்றிய 
____உங்களால் என்னையறிந்தேன்!! 

தன்னையிழந்து என்னை 
____பெற்ற தாய்மையறிந்தேன்!! 

தன்னலம் காணாத 
____என்தந்தையின் நேர்மையறிந்தேன்!! - என் 

தவறில் தாங்கள்கொண்ட 
____வலியை அறிந்தேன்!! 

வலியைய் பொறுத்த 
____வல்லமை அறிந்தேன்!! - அவைகள் 

வல்லமையல்ல என் 
____மேலுள்ள அன்பெனறிந்தேன்!!! 

No comments:

Post a Comment