Wednesday, 14 September 2016

என் காதல்

கனவுகளாய் என் இரவில் 
கவிதைகளாய் என் சொல்லில் 
காகிதமாய் என் அறையில் - காதல் 
கடல்நீராய் என் புவியில்!!! 

மருத்துப்போகுமோ என்னிதயம் காத்திருந்து, 
மதியே! அவளின் மௌனத்தினால்!! 
மரியாதை தந்தாள் என்னன்பிற்கு 
மனதிற்கு மட்டும் வந்துசென்றாள் கனவாக!!! 

ஊர் அறிய வேண்டும் - என் 
உண்மை காதல் என்பது, 
ஊமையானேன் அவளின் சம்மதத்திற்கு, 
உண்மையானேன் என் கனவுகாதலுக்கு...!!! 

Saturday, 10 September 2016

தாயின் அன்பு முத்தம்

கலப்படமில்லா காதல் முத்தம் 
____இலக்கணமில்லா மொழியின் முத்தம் 
கண்ணயரா விழிகள் நித்தம் 
____என்னுயிர்த்தாயின் பார்வை முத்தம்! 

என்னுயிர் உன்னுயிரைக் கொண்டு 
____உன்னுடலில் என்னைக் கொண்டு 
எண்ணங்களில் என்னுருவம் கண்ட 
____மண்ணுலகத் தெய்வத்தின் கனவுமுத்தம்! - அனைவருக்கும் 

விடுமுறை என்பது உண்டு 
____விலகுவதற்கு வாய்ப்பும் உண்டு 
விட்டுக்கொடுக்காமல் உழைப்பாயே எனக்காக - உன் 
____வியர்வையால் குருதி முத்தம்! 

ஊர் வெறுக்கும் தொல்லையானாலும் 
____பேர் கெடுக்கும் பிள்ளையானுலும் 
உணவு சாப்பிட்டாயா? எனக்கேட்க்கும் 
____உன் உச்சப்பாசத்தின் முத்தம்! 

உன்குருதியை உணவாய் தருவாய் 
____உன்னழகில் என்னுடல் தருவாய் 
என் வாழ்க்கை தொடக்கம் தருவாய் - தாயே! 
____உன் அன்பு முத்தத்தில்!!!